சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

கோவை சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை சரவணம்பட்டி தச்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (56) மற்றும் அவரது மனைவி குணசுந்தரி (54) ஆகியோர் போக்கியத்துக்கு வீடு தேடி வந்தனர். அப்போது, கோவை தெற்கு அருணாசலம் காலனியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சரவணம்பட்டி மஹா நகரில் உள்ள வீட்டை போக்கியத்துக்கு விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, குணசுந்தரி ஏப்ரல் 24-ஆம் தேதி ராஜசேகரிடம் ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் வீட்டை ஒப்படைக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக குணசுந்தரி ஜூலை 4-ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...