உடுமலை அருகே ரூ.15 கோடி நில மோசடி: கணியூர் பதிவுத்துறைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததற்கு எதிராக, கணியூர் பதிவுத்துறை அலுவலகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கணியூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. சார் பதிவாளர் பழனிச்சாமி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் விஜயராஜா ஆகியோரின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, துரைராஜா என்பவரின் மனைவி ராஜாமணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான பதிவுக்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்து வரும் கணியூர் சார் பதிவாளரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சார் பதிவாளரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து கலந்து கொண்டனர். மேலும் சார் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...