கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். சூயஸ் நிறுவனத்தின் மூலம் நடைபெறும் இப்பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (05.07.2024) மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மத்திய மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆணையர் பார்வையிட்டார்.



வடக்கு மண்டலம், வார்டு எண் 62-க்குட்பட்ட கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையம், ஜெய் நகரில் உள்ள இரயில்வே பாதை அடிப்பகுதியிலும் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மத்திய மண்டலம், சுங்கம் வரிவசூல் மையத்தில் சூயஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாடிக்கையாளர் சேவை இயந்திரத்தின் செயல்பாடுகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, எழில், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் நாகராஜ், ரவிக்கண்ணன், சூயஸ் நிறுவன திட்ட இயக்குநர் சங்கராம் பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...