கோவை சுந்தராபுரம் அருகே பைக் டாக்ஸி டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது

சுந்தராபுரம் காந்திநகரில் வாடகை கேட்ட பைக் டாக்ஸி டிரைவர் ரஞ்சித்தை அடித்து உதைத்து தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (34). இவர் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவர் நேற்று ஜூன்.27 சுந்தராபுரம் கணேசபுரத்திற்கு சவாரி சென்றார். பின்னர் அங்கு சரண் (19) என்ற வாலிபரை இறக்கி விட்டுவிட்டு வாடகை பணம் கேட்டார். அதற்கு சரண், தனது நண்பர்கள் வந்து கொண்டுள்ளனர். அவர்கள் வந்தவுடன் பணம் தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் யாரும் வரவில்லை. பணமும் கொடுக்கவில்லை. இதனையடுத்து ரஞ்சித், சுந்தராபுரம் காந்தி நகரில் உள்ள சரண் வீட்டுக்கு சென்று பணம் தருமாறு கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்துள்ளார்.

மேலும் அங்கு வந்த சரணின் நண்பர்கள் சிலரும் ரஞ்சித்தை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ரஞ்சித் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேலும் தாக்குதலின் போது, அவரது பணம், வாட்ச் ஆகியவை காணாமல் போனது. இதுகுறித்து ரஞ்சித் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், ரஞ்சித்தை தாக்கியது கூலி தொழிலாளி சரண், போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சதீஷ் (21), போத்தனூரை சேர்ந்த ஸ்டாலின்(28) மற்றும் முல்லை நகரை சேர்ந்த பவித்ரன் (21) என்பது தெரியவந்தது. பின் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...