பீளமேடு ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடிஏற்றி போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைக்காததை கண்டித்து அப்பகுதியில் உள்ள ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை பீளமேடு ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் மேம்பாலத்தின் அருகில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. மேலும் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் செல்ல தனியாக பாதை ஏற்படுத்தாமல் ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதிகள் வழியாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பீளமேடு முருகன் நகர், ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடிகளில் கருப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் எனவும், பீளமேடு ரயில் நிலையத்தில் இருந்து கனரக வாகனங்களை குடியிருப்பு பகுதிகள் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளதை ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் கைவிட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...