கோவை மாநகராட்சியை கண்டித்து அதிகார குரல் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் எட்டு மாத இஎஸ்ஐ மற்றும் பிஎப் பணத்தை செலுத்தாத சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர்கள், துலக்குனர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் அதிகார குரல் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாடா பாத் அருகே, 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாநகாராட்சியை கண்டித்து கோசங்களை எழுப்பினர். அனைத்து தொழிலாளர்களின் எட்டு மாத இஎஸ்ஐ மற்றும் பிஎப் பணத்தை செலுத்தாத சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சி ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும். பணிச்சுமையால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...