தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பாடைசுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, கோவையில் பாடை சுமந்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது செய்யப்பட்டனர். 



வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக கோவை இரயில் நிலையம் முன்பாக டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்திக்காத பிரதமர் மோடியை கண்டித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி, ஒரு மாணவரை பாடை போல எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

மேலும் விவசாயிகள் வங்கிகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரயில் நிலையத்திற்குள் சென்று இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...