கோவை மத்திப்பாளையத்தில் திமுக சார்பில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் அன்னதானம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் 40 கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டப்பட்டது.

இதன் துவக்கமாக பஞ்சமி நாளை முன்னிட்டு கோவை தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்வை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கூறியதாவது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி வழிகாட்டுதல்படி முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவு விழா மற்றும் தமிழக முதல்வர் தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 40க்கு 40 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றதையும், மேலும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கழத்தையும் வழி நடத்திடவும், தமிழக மக்களின் நிரந்திர முதல்வராக பணியாற்றிட வேண்டியும்,அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி வேண்டி 40 திருக்கோவில்களில் அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருந்தோம்.

இதன் தொடக்க விழாவாக கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மத்திப்பாளையத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஸ்வர்ண வாராஹி அம்மன் திருக்கோவிலில் சிறுபான்மை நல பிரிவு சார்பில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி துவக்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை சார்கார்சாமகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் கோவிலில் தொடர்ந்து 7 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 40 கோவில்களில் அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தெரிவித்தார்.

இந்த அன்னதான விழா தொடங்குவதற்கு முன் ஶ்ரீ விஸ்ணு மாய திருக்கோவில் சுவாமிகள் அஸ்வின் யாக பூஜை நடத்திட, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனையை இக்கோவில் சுவாமிகள் இராஜேந்திரன் செய்தார். இந்த விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதிடர், சிவபக்தர், காளி உபாசகர் சிவகுருநாதன் செய்தார். இந்த விழாவில் பக்தர்கள், பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...