வறட்சியால் கோவையை சேர்ந்த விவசாயி தற்கொலை!


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பச்சே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(75). 

அதே பகுதியில் ஆறுமுகத்திற்கு சொந்தமாக 2 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோப்பில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் தனது தோப்பில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்க முடிவு செய்தார். 

தொடர்ந்து, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவழித்து இரு இடங்களில் போர்வெல் அமைத்தார். ஆனால், ஆயிரத்து 300 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் நேற்று மதியம் பூச்சி மருந்து அருந்தினார். இதறிந்த அவரது குடும்பத்தார், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்  வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து, 32-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், வறட்சியினால் கோவையை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...