கோவை ஈஷா ஹோம் பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பீளமேடு அருகே சென்றபோது மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவர் மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளதாக கோவை ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்கள் பள்ளி மாணவர்கள் நேற்று ஜூன்.21 ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் பீளமேடு அருகே சென்றார்கள்.

அப்போது அங்கு நடந்த விபத்தில் எங்கள் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் மோக்ஷக்னா எதிர்பாராதவிதமாக மின்னதிர்ச்சிக்கு உள்ளானார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. விசாரணையும் நடைப்பெற்று வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...