சிறுதுளியின் "இயற்கையை பேணிக்காப்போம்" இலவச கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்

இந்த வருட கோடை காலம் மிக அதிக வெப்பத்துடன் தொடங்கி உள்ளது. இது சென்ற வருடங்களை காட்டிலும் மிக அதிகமானதாகும். வருடா வருடம் வெப்பத்தின் தாக்கம், மழையின்மை, நீர் பற்றாக்குறை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை உணர்ந்து, நாம் அனைவரும் சிந்திக்க தொடங்கி இவற்றை பாதுகாக்க ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் நம் இயற்கை அன்னையை சிறிதளவேனும் புன்னகைக்க செய்ய முடியும். 

எனவே, நாம் இப்போது எதிர்கொள்ளும் இந்த சுற்றுச்சுழல் பிரச்சனைகளை முழுமையாக அகற்றிடவும், குழந்தைகளிடத்தே இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தொடர்ந்து 11-வது வருடமாக சிறுதுளி, "இயற்கையை பேணிக்காப்போம்" என்ற தலைப்பில் இலவச கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை நடத்திவருகிறது.

இதனால் சிறு வயதிலிருந்தே இயற்கையின் முக்கியத்துவம், அவற்றின் பயன்பாடு, பாதுகாக்கும் முறைகள் போன்றவை குழந்தைகளிடத்தில் வெகுவாக வளர்ந்து நாளடைவில் ஒரு இயற்கையான சூழலை அவர்கள் தாமே உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது.

இந்த வருடம் இம்முகாம் வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் கோவையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு வ.உ.சி பூங்காவில் கூடும் இம்மாணவர்களுக்கு, அந்தந்த நாள் பற்றிய நிகழ்வுகளின் குறிப்பும், சுற்றுப்புற சூழல் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் சிறப்புரையும் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து, மாணவர்கள் நேரடியாக களப்பயிற்சி பெறும் வகையில், அந்நாளைய நிகழ்வு தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.



Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...