கள்ளக்குறிச்சி விவகாரத்தை மையப்படுத்தி பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் போதை பொருள் பயன்பாடு தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி வருகிறது. இந்த உயிரிழப்பு விவகாரத்தை தொடர்ந்து போதை பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் உடன் இணைந்து நடத்தினர்.



பொள்ளாச்சியின் கோவை சாலை, பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கடைவீதி என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்த மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதன் பாதிப்புகள் குறித்து போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்களுடன் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து நகர வீதிகளில் உலா வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...