கோவையில் சாலை ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை அழைப்பு

கோவையில், போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பாதசாரிகள் மற்றும் வாகனச் செல்பவர்களுக்கான சாலை இடையூறுகள் நீக்கப்படும் செயல்முறைகளை பற்றி பொதுமக்கள் தகவல் அளிக்க கோரிக்கை.



கோவை: கோவை மாநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் பாலகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பணிகளை கடந்து, மக்கள் மத்தியில் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இதனிடையே, சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகர காவல் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் கூறியதாவது: வாகனப்போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டத்திற்கு தடங்குதலாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநகர காவல்துறை.

கோவை மேற்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களிலும், கோவை கிழக்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், என மொத்தம் 31 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது கோவை மாநகரில் சாலை ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தகவல் ஏதேனும் இருந்தால் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண். 9498181213 அல்லது 8190000100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது 0422 - 2300970 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு அல்லது கோவை மாநகர காவல்துறையின் @policecbecity என்ற X வலைதள கணக்கிற்கோ அல்லது Coimbatore City Police என்ற பேஸ்புக் பக்கத்திலோ தகவல் அளிக்கலாம் என காவல்துறை இன்று ஜூன்.20 அறிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...