கோவையில் சாலை ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை அழைப்பு

கோவையில், போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பாதசாரிகள் மற்றும் வாகனச் செல்பவர்களுக்கான சாலை இடையூறுகள் நீக்கப்படும் செயல்முறைகளை பற்றி பொதுமக்கள் தகவல் அளிக்க கோரிக்கை.



கோவை: கோவை மாநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் பாலகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பணிகளை கடந்து, மக்கள் மத்தியில் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இதனிடையே, சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகர காவல் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் கூறியதாவது: வாகனப்போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டத்திற்கு தடங்குதலாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநகர காவல்துறை.

கோவை மேற்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களிலும், கோவை கிழக்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், என மொத்தம் 31 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது கோவை மாநகரில் சாலை ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தகவல் ஏதேனும் இருந்தால் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண். 9498181213 அல்லது 8190000100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது 0422 - 2300970 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு அல்லது கோவை மாநகர காவல்துறையின் @policecbecity என்ற X வலைதள கணக்கிற்கோ அல்லது Coimbatore City Police என்ற பேஸ்புக் பக்கத்திலோ தகவல் அளிக்கலாம் என காவல்துறை இன்று ஜூன்.20 அறிவித்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...