கோவை மாநகராட்சி பள்ளிகளின் தர மேம்பாட்டிற்கான புதுமையான திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி தலைமையில் இன்று புதிய திட்டங்களும், பள்ளிகளின் தர மேம்பாட்டை உயர்த்தும் நோக்கிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி அரசு பள்ளிகளுக்கு நிறைவேற்ற பட உள்ள புதிய திட்டங்கள் மற்றும் பள்ளிகளின் தர மேம்பாட்டை உயர்த்துவது தொடர்பாக கோவை மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி தலைமையில் ஆலோசணை கூட்டம் மாநகராட்சி வளாக அரங்கில் இன்று (ஜூன்.20) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநாகராட்சி பொறியாளர்கள், மண்டல அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர். 



இதில், மாநகராட்சி அனைத்துப் பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த ஏற்கனவே நடந்த குழுக் கூட்டத்தில் ஆணையர் அறிவுறுத்திய நிலையில், தற்போது. மாணாக்கர்களின் நலன்கருதி உடனடியாக செயல்படுத்தவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டது.



மேலும் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் குறித்தும், கல்வியாண்டு தொடக்கத்திலேயே கற்றல் கையேடு வழங்குதல், மாநகராட்சிப் பள்ளிகளில் கழப்பறை வசதிகள்,கட்டிடம் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

மேலும் பல்வேறு பள்ளிகளில் மைதானத்தை சீரமைப்பது, சேதமடைந்த சுற்றுச்சுவர்களை சரி பார்ப்பது, உயர் நிலை, மேல் நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது என பல்வேறு பணிகள் நடைபெறாமல் இருப்பதை சுட்டி காட்டிய கல்வி குழுவினர் உடனடியாக இந்த பணிகளை செயல்படுத்த முன்வர வேண்டும் என கூறினர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...