கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாமனார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

கணவருடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் போலீசாரிடம் மனைவி கூறியதால், ஆத்திரமடைந்த கணவர், மாமனார் வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து மருமகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஆா்.எஸ்.புரம், மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60), ஆட்டோ ஓட்டுநா். இவரது மகளுக்கும், வேடப்பட்டி வி.டி.எஸ். நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்நிலையில் மதன்ராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல, இருவருக்கும் இடையே திங்கள்கிழமை ஜூன்.17ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து, மதன்ராஜ் மீது அவரது மனைவி தொண்டாமுத்தூா் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, மதன்ராஜூடன் சோ்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குத் தொடர உள்ளதாகவும் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ், மீனாட்சி நகரில் உள்ள மனைவியின் தந்தை ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைப் பார்த்த அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் வீட்டின் முன்பகுதியில் இருந்த சில பொருள்கள் மற்றும் வீட்டின் முன்பக்க கதவு ஆகியவை தீயில் சேதமடைந்தன. பின்னர் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநா் மதன்ராஜை நேற்று ஜூன்.19 கைது செய்தனா்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...