தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று ஆளுநர் ஆா்.என்.ரவி கோவை வருகை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்றிரவு 7 மணிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை வருகிறார்.


கோவை: சா்வதேச யோகா தினம் நாளை (ஜூன்.21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறார்.

இதற்காக சென்னையிலிருந்து இன்று ஜூன்.20 புறப்பட்டு விமானம் மூலம் இரவு 7 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் வரும் ஆளுநா், அங்கிருந்து கார் மூலம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

இதையடுத்து சா்வதேச யோகா தினத்தையொட்டி நாளை ஜூன்.21 காலை 5.55 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறார்.அதன் பின்னா் காலை 10.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் கோவையிலிருந்து சென்னை திரும்புகிறார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...