கோவையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் - மதுக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூன் 19ம் தேதி தொடங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை: கோவை, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தைமாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று ஜூன்.19 தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டார். 

மேலும் அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.



மேலும் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த மாணவர்களிடமும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி படிக்காமல் இருந்த மாணவ மாணவிகள் இடமும் நேரடியாக வீடுகளுக்கே சென்று அது குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மதுக்கரை நகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். 



மேலும் மதுக்கரை அரசு பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களின் வருகை குறித்தும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு 6000 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கி 20 பயனாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...