கோவையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் - மதுக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூன் 19ம் தேதி தொடங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை: கோவை, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தைமாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று ஜூன்.19 தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டார். 

மேலும் அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.



மேலும் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த மாணவர்களிடமும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி படிக்காமல் இருந்த மாணவ மாணவிகள் இடமும் நேரடியாக வீடுகளுக்கே சென்று அது குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மதுக்கரை நகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். 



மேலும் மதுக்கரை அரசு பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களின் வருகை குறித்தும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு 6000 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கி 20 பயனாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...