கோவையில் 'தோழி விடுதிகள்' அமைக்கப்பட இடங்கள் தேர்வு

தமிழக அரசு கோவையில் பணிபுரியும் மகளிருக்கான 'தோழி விடுதிகள்' திட்டத்திற்கு அமைக்கப்பட உள்ள இடங்களை தேர்வு செய்துள்ளது. இது மகளிருக்கு நிறைவான வசதிகளுடன் கூடிய விடுதிகளை உறுதி செய்வதற்காக உள்ளது.


Coimbatore: வெளிமாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களில் உள்ள மாநகரங்களுக்கு பணிபுரிய பெண்கள் செல்லும் போது பலரும் தனியார் விடுதிகளில் தங்குவர். பெண்கள் அனைவர்க்கும் தனியார் விடுதி கட்டணங்களை செலுத்துவது சுலபமாக இருக்காது. சிலருக்கு பாதுகாப்பு குறித்தும் ஐயமிருக்கும். மேலும் பெண்கள் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை'தோழி விடுதிகள்' திறக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு, ரூ.13 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மற்றும் திருச்சியில் மகளிர் விடுதிகள் திறக்கப்பட்டன. மேலும் ரூ.3.42 கோடி மதிப்பில் சென்னை, அடையாறு, விழுப்புரம், தஞ்சை, சேலம், வேலூர், நெல்லை மற்றும் பெரம்பலூரில் மொத்தமாக 7 விடுதிகள் புதிப்பிக்கப்பட்டு பயன்பட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

தனியார் விடுதிகளுக்கு நிகரான அனைத்து வசதிகளும் இந்த தோழி விடுதிகளில் வழங்கப்பட்துள்ளதாகவும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா, பயோமெட்ரிக் முறையில் திறக்கும் கேட்கள் இருப்பதால்பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த விடுதிகளில் தங்க முன்பதிவு செய்ய விரும்புவோர், https://www.tnwwhcl.in/ எனும் இணையத்தளம் மூலம் தங்களுக்கு தேவை படும் அறைகளை புக் செய்யலாம். இதன் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.4000 அதிகபட்சம் ரூ.6,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின் போது, தமிழக அரசு கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளீருக்கான 'தோழி விடுதிகள்' திட்டம்கீழ் பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ. 26 கோடி ஓதுக்கி உள்ளது.

இந்நிலையில் இதற்கு இடங்கள் தேர்வு செய்யும் பணியை அரசு ஜூன்.18 மேற்கொண்டுள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் உள்ள நிலங்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...