கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பைகிடங்கு வளாகத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் சுமார் 2000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.

மேலும், மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நல்ல முறையில் பராமரித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம் பாஷா, உதயகுமார், குணசேகரன், அப்துல்காதர், பாபு, வசந்தா, சரளா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...