உயிரிழப்பில் சந்தேகம் எனக்கூறிய மருத்துவர்களுக்கு எதிர்ப்பு - பல்லடம் அரசு மருத்துவமனை முற்றுகை

பனப்பாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பூர் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைக்க பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருப்பூர் சாலை பனப்பாளையம் பகுதியில், தொட்டிபாளையம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த போது கீழே விழுந்து காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது உயிரிழப்பு சந்தேகத்தின் அடிப்படையில் இருப்பதாக பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.



இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, விசாரணையின் அடிப்படையில் வழக்குகள் மாறும், ஆகவே விசாரணை உரிய முறையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து, அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார். அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...