தாராபுரத்தில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் 127வது அரங்கேற்றம் விழா - கும்மியாட்டம் ஆடி கலைஞர்கள் அசத்தல்

முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் மற்றும் தத்துவ பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள், பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் அரங்கேற்ற விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழு சார்பில் 127-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில், இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழுவின் ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான பவளக்கொடி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடை அணிந்து ஆடினர். இதில் சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.



முருகன் வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் விழாவில் இடம்பெற்றன. இந்த கும்மியாட்டத்தை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...