கோவை சுங்கம் பைபாஸ் அருகே கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்த இரண்டு பேர் கைது

தியாகி சிவராம் நகர் ஜங்சன் அருகே கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள், 50 கிராம் கஞ்சா, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் கஞ்சா, போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜூன்.18 மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது தியாகி சிவராம் நகர் ஜங்சன் அருகே 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை சோதனை செய்தபோது, இருவரும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொண்டாமுத்தூர் ஓணாபாளையத்தை சேர்ந்த வெங்காய வியாபாரி ரஷல் பிரான்சிஸ் (32), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர் சிங் பங்கு (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள், 50 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...