கோவையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.70-க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை, சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், இன்று (18.06.2024) கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மைப்பணிகளுக்கு ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், 15726 எண்ணிக்கையிலான தளவாட பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார்தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக சுமார் 2220 நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தூய்மைப்பணியாளர்கள், பொதுசுகாதாரப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு தேவைப்படும் தளவாட பொருட்களின் தொகுப்பாக கைசீமாறு 3195, ஜல்லை சீமாறு 2050, முறம் 985, 2 பள்ளு கொத்து 740, 4 பள்ளு கொத்து 560, மண்வெட்டி 754, மூங்கில் கூடை பெரியது 1210, மூங்கில் கூடை சிறியது 1180, சாக்கடை பலகை 760, பிளாஸ்டிக் சட்டி 1952, ரோடு கூட்டும் பிரஸ் 1000, வீச்சு 400, அருவாள் 605 மற்றும் கடப்பாறை 335 என மொத்தம் 15726 எண்ணிக்கைகளான பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.



உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா, ரேவதி முரளி, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதா ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...