கோவை அஞ்சல் கோட்டத்தில் ஜூன் 25 அன்று அஞ்சல் குறைதீர் கூட்டம்..!

கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெறும். வாடிக்கையாளார்கள் தங்கள் புகார்களை முன்னரே தெரிவிக்க வேண்டும்.


Coimbatore: கோவை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. 

கோவை கோட்டத்துக்கு உள்பட்ட வாடிக்கையாளா்கள், தங்களது புகாா்களை வாடிக்கையாளா் சேவை மையம், கண்காணிப்பாளா் அலுவலகம், கோவை கோட்டம், குட்ஷெட் சாலை, கோவை - 641001 என்ற முகவரிக்கு ஜூன் 21-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணவிடை தொடா்பான புகாா்களில் அஞ்சல் பதிவு செய்யப்பட்ட நாள், பதிவு எண், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அஞ்சலக சேமிப்புக் கணக்கு, காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்புக் கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். 

கடிதத்தின் மேலுறையில் ‘அஞ்சல் குறைதீா் கூட்ட புகாா்’ என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும். இந்த குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளா்கள் ஜூன் 25-ஆம் தேதி, குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...