கோவையில் புதிய அங்கன்வாடி மையங்களின் பூமி பூஜையை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

கோவையில் MLA வானதி சீனிவாசன் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்தினார். வார்டுகள் எண் 48, 67, 69 மற்றும் சித்தாப்புதூர் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 48வது வார்டு, போலீஸ் குவாட்டர்ஸ், சித்தாபுதூர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது.



இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார். 



இதேபோல மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 67வது வார்டில் உள்ள வி.கே.கே மேனன் சாலை, சித்தாப்புதூர் சுற்றியுள்ள பகுதி குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார்.



இதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் வார்டு எண் 67, அண்ணபூர்ணா லே அவுட், சித்தாப்புதூர் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்றுதொடங்கி வைத்தார். 



இதேபோல பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவை குறைவில்லாமல் கிடைத்திட வழிவகை செய்யும் வார்டு எண் 69, காமராஜபுரம் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதியஅங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...