கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகை - காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி

கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகையால் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மூச்சுதிணறி அவதிப்பட்டனர். காவல்நிலையம் அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தை மாற்ற கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சிகுட்பட்ட இடத்தில் கணியூர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகிலேயே ஜோத்தம்பட்டி ஊராட்சியின் குப்பைகொட்டும் இடமும் உள்ளது. இதில் அவ்வப்போது தீபற்றி கொள்வது வழக்கும்.



இந்நிலையில் திடீரென நேற்று மதியவேலையில் தீபற்றி கரும்புகை எழுந்து காவல்நிலையத்தை சூழ்ந்தது இதனால் காவலர்கள் புகையை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அருகிலுள்ள காரத்தொழுவு மடத்துக்குளம் சாலையிலும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஒட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தினறினர்.

காவல்நிலையம் அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் அல்லது தீபற்றி கரும்புகை எழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கபடுகிறது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...