கோவை கொடிசியாவில் இன்று முப்பெரும் விழா - அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகின்றனர். விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார்.


கோவை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, கலைஞர் நூற்றாண்டு விழா என மூன்று நிகழ்வுகளை இணைத்து முப்பெரும் விழாவாக இன்று ஜூன்.15 கோவையில் கொடிசியா மைதானத்தில் நடத்தப்படுகிறது.

அதன்படி இன்று மாலை இந்த விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் தமிழக எம்.பி க்கள் 40 பேர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்களான வைகோ, முத்தரசன், உட்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் பார்த்து வருகிறார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகை புரிய உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பேர் அமர இருக்கைகள் போடப்பட்டு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக இப்பகுதி மட்டுமல்லாது கொடிசியா சுற்றுப்புற பகுதிகள், விமான நிலையம் என சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...