திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று மாலையில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ள நிலையில், விழா மேடைக்கு அருகிலேயே காவல்துறையினரின் தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்காக பாடுபட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா இன்று மாலை கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உட்பட அனைத்து அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். விழாவிற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி கோவை அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் அமைச்சர்கள், அதற்கு பின் வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் அமரும் வகையிலும், தொண்டர்களுக்காக 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையும், நூற்றி ஒன்றாவது ஆண்டு துவக்க விழாவையும் நினைவு கூறும் வகையில் மேடையில் நிறுவுவதற்காக சுமார் 8 அடி உயரத்தில் கலைஞர் கருணாநிதியின் இரண்டு திரு உருவ சிலைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஏராளமானோர் இந்த விழாவிற்கு வருவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ள நிலையில், விழா மேடைக்கு அருகிலேயே காவல்துறையினரின் தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா வளாகத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகின்ற நிலையில், அவிநாசி நெடுஞ்சாலை போக்குவரத்து மாற்றம் செய்திருக்கின்றனர். புறவழிச்சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் l&t பைபாஸ் வழியாக திருச்சி சாலையில் இணைந்து சிங்காநல்லூர் ராமநாதபுரம் உக்கடம் பகுதிக்கு வரலாம். அதேபோன்று சக்தி சாலை வழியாகவும் புறவழிச் சாலை வழியாக வரும் வாகனங்கள் பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

அவிநாசி சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். மற்றும் பயனியர் மில்ஸ் வழியாக சேரன்மாநகர், காளப்பட்டி, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் மாநகரத்தில் வர அனுமதி தரவில்லை.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...