கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

கோவை வெள்ளியங்கிரி கோவில் அன்னதான அறையில் காட்டு யானை புகுந்த சம்பவம் நேற்று நடந்தது. வாழைப்பழங்கள் வீசி யானையை வெளியேற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. அடர் வனப்பகுதி என்பதால் அவ்வப்போது உணவு தேடி காட்டு யானைகள் அங்குள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்றைய தினம் ஜூன்.13 ஒற்றை காட்டு யானை வெள்ளியங்கிரி கோவிலுக்கு உட்பட்ட அன்னதான உணவு பொருட்கள் வைக்கக்கூடி கூடத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனை அடுத்து நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு வாழைப்பழங்களை வீசி காட்டு யானையை அன்னதான கூடத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

மேலும் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவும் யானை போன்ற காட்டு மிருகங்கள் கண்ணில் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...