கோவையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 13 அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி தமிழக அரசை கண்டித்தனர்.


கோவை: மாநிலத் தழுவிய மாவட்ட அளவிலான தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் இன்று ஜூன்.13 நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழக அரசை கண்டித்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று ஜூன்.13 நடைபெற்றது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. அப்போது 80% முதல் 90% வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக ஆசிரியர்கள் பயனடைந்தனர். ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகு அதனை குறைத்து 30% முதல் 40% வரை மட்டுமே பயனடையும் வகையில் மாற்றி உள்ளனர்.

மேலும் United India Insurance நிறுவனம் மூலமாக காப்பீட்டு வழங்கி வந்த நிலையில் தற்போது அதனை MD India மற்றும் Medi Assist என்ற நிறுவனம் மூலம் குறைந்த அளவில் திமுக அரசு வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லாத சிகிச்சை வழங்க வேண்டும் இல்லாவிட்டால் ஜூலை 17-ம் தேதி United India Insurance காப்பீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசை கண்டித்தும் மாபெரும் மாநிலம் அளவிலான போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...