உடுமலை அருகே வளையபாளையத்தில் தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி காட்டு யானைகள் அட்டகாசம்

வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் ஐந்து வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின. சேதமடைந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து ஐந்து வருடமாக பராமரிக்கப்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள மின் வேலியையும் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரிடம் பேசிய விவசாயிகள், காட்டு யானைகள் கடந்த சில தினங்களாகவே விவசாய நிலங்களுக்குள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே வனத்துறையினர் சுற்றுகாவல் பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான தென்னை மரங்களுக்கும் மின்வேலிக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...