தாராபுரம் அருகே கிராம சாலைப்பகுதியில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை – பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

கவுண்டச்சி புதூர் ஊராட்சி எல்லைப்பகுதியில், சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கவுண்டச்சி புதூர் ஊராட்சி. இதன் எல்லைப் பகுதியில் உடுமலை செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தபொதுமக்களில் சிலரும், தாராபுரம் நகராட்சி பகுதியில் பிராய்லர் கோழி இறைச்சி கடைகள் வைத்திருக்கும் பலரும் இரவோடு, இரவாக அதன் கழிவுகளை கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில்குப்பைகளால் சுப்பிரமணியபுரம், கொண்டரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலையில் சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்படும் இடம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், கவுண்டச்சி ஊராட்சி செயலாளர் நாகராஜ், மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

குப்பைகளை பத்து நாட்களுக்குள் அகற்றாவிட்டால், வரும் 23ம் தேதி தாராபுரம் உடுமலை சாலையில் தண்ணீர் பந்தல் அருகே சாலை மறியலில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசமாக பேசினர். பொதுமக்களை சமாதானப்படுத்திய தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நிரந்தரமாக அகற்றி ஒரே இடத்தில் சேமிக்க தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் குப்பை கிடங்கு அமைத்து இனிவரும் காலங்களில் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நபர்களை கையும் களவுமாக பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...