கோவை வட்டாரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் – மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகள் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதொடங்கி வைக்கும் விதமாக, தென்னமநல்லூர் ஊராட்சி, மீன்தொட்டி பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அண்மையில் ஜூன்.12 தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், தென்னமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல் பணிக்கு சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநர் 1,27,420 குறியீடு நிர்ணயம் செய்து வரப்பெற்றுள்ளது. அதில் 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 39,477 மரக்கன்றுகள் பொது திறந்தவெளிப்பகுதி, சாலையோரம் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் நடுதல் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



அவற்றில் உலக சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு 5382 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார நர்சரி மற்றும் 12 கூடுதல் நர்சரிகளில் 1,75,560 நாற்றங்கால் உற்பத்தி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகளும், காரமடை வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், கிணத்துகடவு வட்டாரத்தில் உள்ள 34 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22000 மரக்கன்றுகளும், மதுக்கரை வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள 39 ஊஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22,204 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் உள்ள 26 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20,150 மரக்கன்றுகளும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள 7 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 5426 மரக்கன்றுகளும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 15,500 மரக்கன்றுகளும், சூலூர் வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 7,750 மரக்கன்றுகளும் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...