கோவையில் 18 மாத கைக்குழந்தையுடன் மருத்துவர் பட்டம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

கோவையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 18 மாத கை குழந்தையுடன், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஷிபினா என்பவர் பட்டம் பெற்றார். அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஷிபினா. இவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, 2018-19 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கல்வி முடியும் முன்பே, 2021 ஆம் ஆண்டு மருத்துவரான அப்து ராஃப் என்பவருடன் திருமணம் இவருக்கு திருமணம் நடைபெற்றது.



திருமணத்திற்கு பிறகும் மருத்துவப் படிப்பை தொடர்ந்த ஷிபினாவுக்கு திருமணம் முடிந்த ஒருவருடத்திற்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்துக்கொண்டே, படிப்பை தொடர்ந்த ஷிபினா இன்று டாக்டர் ஷிபினா எம்.பி.பி.எஸ்ஸாக பட்டம் பெற்றார்.



கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தனது 18 மாத ஹலீமா என்ற பெண் கை குழந்தையுடன், வந்து பட்டம் பெற்றார். அவருக்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். பட்டம் பெற்ற ஷிபினாவுக்கு குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...