கோவை ரேஸ்கோர்ஸ் வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் இருந்த சந்தனமரம் வெட்டிக் கடத்தல்

வருமான வரித்துறை அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் இருந்த சந்தனமரத்தை யார் வெட்டிச் சென்றார்கள் என்று சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பந்தய சாலை பகுதி, ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றின் அருகே அமைந்துள்ளது. இங்கு கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், கோவை மண்டல துணை காவல்துறை தலைவர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றின் தளங்கள் உள்ள ரெட் ஹில்ஸ் பகுதியும் அமைந்துள்ளது.

ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள இப்பகுதியில் எப்போதும் காவல்துறை நடமாட்டம் இருக்கும். இப்பகுதியில் 3 கல்லூரிகள் மற்றும் ஏராளமான நிறுவனங்களின் தலைமையகங்கள், கடைகள் ஆகியவையும் அமைந்துளளன.

மேலும் காலை, மாலை வேளைகளில் இங்குள்ள நடைபாதையில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இங்குள்ள வருமான வரித்துறை அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் சுமார் 20 ஆண்டுகளான சந்தனமரம் ஒன்று வளர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று (ஜூன்.11) காலை அவ்வழியே சென்றவர்கள், மரம் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பந்தயசாலை காவல் நிலைய போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, மரத்தை வெட்டிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...