அா்த்தநாரிபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அா்த்தநாரிபாளையத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே அா்த்தநாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (64), விவசாயி. இவா், அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு கடந்த 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று ஜூன்.10 தீா்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி ஜி.குலசேகரன் அளித்த தீா்ப்பில், பெருமாளுக்கு ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5,000 அபராதமும், மற்றொரு பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2,000 அபராதமும், மூன்றாவது பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்ததோடு, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...