'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27-வது வார்டு பகுதியில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டம் செயல்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் 6-வது வாராமாக இளம் குழந்தைகளுடன் இணைந்து தூய்மை செய்யும் பணி மற்றும் மரம் நடும் பணி நடைபெற்றது.

இதில், வார்டு மக்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் மரம் நடப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் பின்புறம் படர்ந்திருந்த களைச் செடிகள், புதர்கள் அகற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதி வார்டு மக்கள் மத்தியில் 'நமது வார்டும் நமது வீடே' திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்த களப் பணிகள் வாரத்தில் அப்பகுதி இளம் சிறுவர், சிறுமிகள் ஒன்றிணைந்து தூய்மை செய்தும், மரங்கள் நட்டும் மறுமலர்ச்சி சேவையில் ஈடுபட்டனர்.