உடுமலை பாஜக சார்பில் மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழா கொண்டாட்டம்

உடுமலையில் பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. பரபரப்பான முடிவுகளுக்கு இடையே பாஜக கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமராக 3-ம் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த விழாவை பாஜக வினர் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். அந்த வகையில் உடுமலை நகர பாஜக சார்பில் மோடி பதவியேற்பு விழா கொண்டாடப்பட்டது.



விழாவிற்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து மோடி 3-ம் முறையாக பதவி ஏற்பதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி மற்றும் பாஜகவினரை பாராட்டி நிர்வாகிகள் பேசினார்கள்.

மேலும் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 7000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நன்றிகள் பேய்க்கப்பட்டது.



இதையடுத்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை மகளிர் அணி ரதி, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேசன், ஹரி, சின்ராஜ், முருகேஷ், சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...