கோவையில் திமுக சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கான இடத்தை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

கோவையில் நடக்க உள்ள திமுகவின் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கான இடம் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது


கோவை: கோவையில் திமுக சார்பில் வருகிற 14-6-2024, அன்று, நடைபெற உள்ள, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40/40 மாபெரும் வெற்றியைப் பெற்றமைக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்குக் காரணமான தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகியவை ஒருங்கிணைந்து, திமுக சார்பில் பிரம்மாண்டமாக முப்பெரும் விழாவாக நடத்தப்படும் இடத்தை, இன்று 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.00 மணியளவில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், L&T பைபாஸ் சாலையில் இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ், ஆர்.மணிகண்டன், ஒருங்கிணைந்த கோவைமாவட்ட திமுகவிற்கு உட்பட்டகழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...