வால்பாறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு


வால்பாறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 65-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 6-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது. 



திருவிழாவின் கடைசி நாளான திங்களன்று காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தினை வள்ளிக்கன்னு, மதனகோபால் முதலியார், மருத்துவர் முனிசாமி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துராஜ், நகராட்சி ஆணையாளர் சம்பத்குமார் மற்றும் வனத்துறையினர் ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.



முன்னதாக, பக்தர்கள் அங்க அலகு பூட்டி நல்லகாத்து ஆற்றில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பறவைக்காவடியில் தொங்கியவாரு ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடைந்து வழிபாடுகள் செய்தனர்.



தொடர்ந்து கரகாட்டம், செண்டமேளம், சிக்காட்டம், இன்னிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் சுவாமி முக்கிய வீதிகள் தேர்பவனி சென்று இரவு 12 மணியளவில் கோவிலை வந்தடைதல் நடைபெற்று. இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 2 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று 3 மணிக்கு வானவேடிக்கையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...