பொள்ளாச்சியில் புதிய உள்நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் புதிதாக கட்டப்பட்ட உள்நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் நீட் விலக்கு பெற தமிழக அரசானது சட்ட போராட்டம் தொடர்ந்து நடத்தும் என அவர் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 72 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முறையில் உள் நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிட திறப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறவேண்டும் என்ற அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் கட்டணப்பிரிவு வசதி முதல் முறையாக பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாய் கடி, மற்றும் பாம்பு உள்ளிட்ட விஷக்கடிகளுக்கான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் லோடிங் டோஸ் எனப்படும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஏராளமான குளறுபடி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், தற்போது வட மாநிலங்களிலும் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நீட் விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...