கோவையில் TNPSC குரூப் 4 தேர்வில் 69,737 பேர் பங்கேற்பு

கோவையில் TNPSC குரூப் 4 தேர்வை 69,737 பேர் எழுதுகின்றனர். காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை நடைபெறும் இந்த தேர்விற்கு, 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனி செயலாளர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், ஆய்வக உதவியாளர் உட்பட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.



அதற்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் நடைபெறும் குரூப் 4 தேர்வை 69 ஆயிரத்து 737 பேர் எழுதுகின்றனர். இதற்காக 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.



இந்த நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் செளரிபாளையம் பகுதியை சேர்ந்த கரோலினா என்ற பெண் அவரது ஆறு மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வருகை புரிந்தார். தேர்வு துவங்கும் வரை குழந்தையை பார்த்துக்கொண்ட அவர் தேர்வு துவங்கியதும் குழந்தையை அவரது கணவரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.



அதேசமயம் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வருகைபுரிய 9 மணி வரை அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களிடம் இவ்வாறு தாமதமாக வரக்கூடாது என்று கூறி அலுவலர்கள் அனுமதித்தனர். சிலர் மிகவும் தாமதமாக வந்த நிலையில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...