மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டடம் மற்றும் உபகரணங்கள், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் காரமடை வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் மற்றும் ரூ.22.75 இலட்சம் மதிப்பீட்டில் இரட்டை வகை செவிலியர் குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன்.8) திறந்துவைத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.



அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, கூடுதல் இயக்குநர் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை மரு.கிருஷ்ணா, இணை இயக்குநர், (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.என்.என். இராஜசேகரன், மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்ற தலைவர் மெஹரி பாபர்வீன் அசரப் அலி, காரமடை நகராட்சி நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் நகராட்சி துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் இரா.ஸ்ரீராம், கே.ரவி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...