நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்க ரூ.20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கைது

சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி என்பவரிடம், நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க 20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


கோவை: கோவை, சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி. இவா் கோவை குறிச்சி சிட்கோவில் உள்ள தனது நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று கோரி கோவைப்புதூா் தீயணைப்பு நிலையத்தில் விண்ணப்பித்துள்ளார்.

தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சிவராஜ் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்புசாமி இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவா்களின் ஆலோசனையின் பேரில் கருப்புசாமி ரூ.20,000 சிவராஜிடம் நேற்று ஜூன்.7 கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் சிவராஜை கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...