கோவை உக்கடத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் அருகாமையில் இஸ்ரேல் அரசின் போர் செயல்பாட்டைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போர் நடவடிக்கைகளை நிறுத்தி பாலஸ்தீன மக்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர்.


கோவை: கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில், கோவை மாவட்டம் சார்பாக பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.7 ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் அன்சாரி கண்டன உரையாற்றினார்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள்போரில் காயம் அடைந்தது போல் கை, கால், தலைப்பகுதிகளில் இரத்த கட்டு அணிந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பாலஸ்தீன் தெற்கு எல்லையில் ரஃபா பகுதியில் பொதுமக்கள் கூடாரங்களில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கின்ற போது அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி குழந்தைகள் உட்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்த இஸ்ரேலின் செயல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

ரஃபா எல்லையில் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் (ICJ) அறிவித்த பிறகும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலை ஈடுபடும் இஸ்ரேலுடன் தூதராக உறவை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பாலஸ்தீன நாட்டை இதுவரை 140 நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ள வேலையில் பாலஸ்தீன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்கப்படவும், தன்னாட்சி பெற்ற பலஸ்தீனம் இயங்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...