பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி - போலீசார் விசாரணை

அம்பராம்பாளையம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான உக்கடம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான மணிகண்டன் என்ற பள்ளிச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இது குறித்து ஆனைமலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறை நாளில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஐந்து பேர் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் நீண்ட நேரப்போராட்டத்துக்கு பிறகு உக்கடம் பகுதியை சேர்ந்த 14 வயதான மணிகண்டன் என்ற சிறுவன் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆனைமலை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...