கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை பொருள் விற்பனை - கூட்டாளிகளுடன் கென்யா நாட்டு பெண் கைது

மெத்தபேட்டமைன் என்ற உயர்ரக போதை பொருள் விநியோகம் செய்த வழக்கில் வினோத், பிரவீன் மற்றும் கென்யாவை சேர்ந்த பெண் இவி பொனுகே ஆகியோரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் இன்று ஜூன்.7 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வசதி படைத்த இளைஞர்களை குறிவைத்து மெத்தபேட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது கோவை பன்னிமடை அருகே கடந்த மாதம் 17ம் தேதி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் 102 கிராம் மற்றும் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெர்வின் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அந்த இளைஞர்களுக்கு கோவையை சேர்ந்த வினோத் என்பவரும், அவரது நண்பர்களும் போதை மருந்தை விநியோகம் செய்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ஒரு வார தேடுதல் வேட்டைக்கு பின்பு தலைமறைவாக இருந்த இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான பிரவீன் என்பவர் போதைப்பொருள் விநியோகம் செய்தது தெரியவந்தது. பெங்களூரில் வாடகை கார் ஓட்டுனராக பிரவீன் பணிபுரிந்து வந்த நிலையில், பிரவீனை கோவை காவல் துறையினர் பெங்களூரில் கைது செய்தனர். பிரவீனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு சக கால் டாக்ஸி ஓட்டுனர் மூலம் போதை பொருள் விநியோகம் செய்பவர்களின் வாட்ஸ் அப் எண் கிடைத்ததாகவும், அந்த வாட்ஸ் அப் குழுவில் பணப்பரிவர்த்தனை செய்வதன் மூலம் உயர் ரக போதை பொருள் வாங்க முடியும் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீசார், கைது செய்யப்பட்ட பிரவீன் மூலமாக மெத்தப்பேட்டமைன் போதை பொருளை வாட்ஸ் அப் எண்ணில் ஆர்டர் செய்தனர். அதற்கு விலையாக 15,000 ரூபாய் செலுத்தபட்டது. இதனைத் தொடர்ந்து யுபிஐயுடன் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் குறித்து கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த செல்போன் எண் டெல்லியில் படித்து முடித்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த இமான் தலேம்வா என்பவருடையது என்பது தெரியவந்தது.

இவான் தலேம்வா படிப்பு முடித்து உகாண்டா திரும்பிய நிலையில், அவரது வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டை கென்யா நாட்டைச் சேர்ந்த இவி பொனுகே என்பவர் பயன்படுத்தி வருவதும், இவர் பெங்களூரில் தங்கி சட்டம் படித்து வரும் மாணவி என்பதும் தெரியவந்தது. அந்த வங்கி கணக்கினை போதைப் பொருள் விநியோகத்திற்கு பணத்தை பெறுவதற்கு மட்டும் பயன்படுத்தி வந்துள்ளதும், டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை 45 லட்ச ரூபாய் வரை அந்த கணக்கில் பணப்பரிவத்தனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கென்யா நாட்டினை சேர்ந்த இவி பொனுகேவின் இருப்பிடத்தை கண்டறிந்த கோவை தனிப்படை போலீஸ் குழுவினர் அவரை கண்காணித்தனர்.

கென்யாவை சேர்ந்த ஐவி போனுஙகே பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைக்கு அடிக்கடி சென்று வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற போலீசார் அந்த கென்யா நாட்டு பெண்ணின் புகைப்படம் மற்றும் விவரங்களை சேகரித்தனர். 

இந்நிலையில் பெங்களூர் லூலூ மாலில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த கென்யா பெண் இவி பொனுகேவை கோவை காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது உகாண்டா நாட்டு சேர்ந்த அவரது காதலன் ஏவியன் போங்கே என்பவரை சிறையில் சென்று பார்த்ததும், சிறையில் இருந்தபடி ஏவியன் போங்கே மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்து வந்திருப்பதும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அவர் இரண்டு செல்போன்களை பயன்படுத்தி வந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 

யுபிஐ மூலம் பணம் கணக்கில் வந்தவுடன் ஏதாவது ஒரு பொது இடத்தில் போதை பொருளை விநியோகம் செய்வதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் வினோத், பிரவீன் மற்றும் கென்யாவை சேர்ந்த பெண் இவி பொனுகே ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் போதை பொருள் கடத்தல் தலைவன், உகாண்டா நாட்டை சேர்ந்த ஏவியன் போனுங்கே குறித்தும் அவர் பயன்படுத்தும் செல்போன்கள் குறித்தும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ள தனிப்படை போலீசார், சிறையில் இருக்கும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

பெங்களூரு மத்திய சிறையில் இருக்கும் ஏவியன் போங்கேவினை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டால் தான் சர்வதேச அளவில் உள்ள போதை பொருள் குழுவினரின் தொடர்புகளை கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட வினோத், பிரவீன் ஆகியோர் கோவை சிறையிலும், கென்யாவைச் சேர்ந்த பெண் இவி பொனுகே சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை தனிப்படை போலீசார் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெத்தபேட்டமைன் என்ற உயர்ரக போதை பொருள் விநியோகத்தில் நூல் பிடித்தது போல அடுத்தடுத்து பின்னணியில் உள்ள குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடிச் சென்று கைது செய்துள்ளனர். தற்பொழுது ஜூன்.7 இதன் சர்வதேச தொடர்புகளையும் கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...