கோவை கோனியம்மன் தேர் அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய நபர் கைது.!

ராஜ வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலின் தேர்நிலை திடல் பகுதியில் உள்ள தேர் அருகே இறைச்சி கழிவுகளை வீசிய முகமது அயாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தேர் திடல், ராஜ வீதியில் அமைந்துள்ள நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரின் அருகே இறைச்சி கழிவுகளை வீசி சென்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காந்தி பார்க் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வரும் முகமது அயாஸ் என்பவர், அவரது கடையில் இருந்த ஆடு மற்றும் கோழி இறைச்சிகளின் கழிவுகளை, கோனியம்மன் கோயிலின் தேர்நிலை திடல் (தேர்முட்டி) பகுதியில் உள்ள கோனியம்மன் தேர் அருகில் வீசிச் சென்று வருவதாக, அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 



இந்த நிலையில், தொடர்ச்சியாக, இறைச்சிக் கழிவுகளை தேர் அருகில் வீசிச் சென்றதால், உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் இது குறித்துபுகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் முகமது அயாஸ் மீது 153A (சாதி, மத ,இன மொழி தொடர்பாக விரோத உணர்வுகளைத் தூண்டுதல்), 290 (தொல்லை கொடுத்தல்), 504 (அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது அயாஸை நேற்று ஜூன்.6 கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...