உணவு பாதுகாப்பு துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் உணவு பொருட்களை பொட்டலமிடுவதற்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், தடையினை மீறி பயன்படுத்தும் போது பறிமுதல் செய்வதோடும் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளிர்பான கடைகள், தர்பூசணி பழக் கடைகள், பழச்சாறு விற்பனை நிலையம், ஐஸ் க்ரீம் கடைகள் மற்றும் சாலையோர மாலை நேர சிற்றுண்டி கடைகள் நடத்தும் உணவு வணிகர்களிடம் பாதுகாப்பான குடிநீர், செயற்கை நிறமி இல்லாத உணவு பொருட்கள், ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்துதல் கூடாது என்றும், இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் புகார்களை 0422- 2220922 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமண அலுவலர் தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...