வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் உள்ள 5,361 இடங்களுக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 6 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 தொழில் முறை பாடப் பிரிவுகளில் உள்ள 371 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளம் அறிவியல் (வேளாண்மை), இளம் அறிவியல் (தோட்டக்கலை) படிப்புகளில் உள்ள 340 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதற்காக கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்காக மொத்தம் 26,357 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களில் 16,289 பேர் மாணவிகள். 10,068 பேர் மாணவர்கள். அதேபோல பட்டயப் படிப்புக்கு 2,428 பேர் விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...